Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எல் கிரிக்கெட்: மதுரை அணி அதிரடி வெற்றி

Webdunia
வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (22:28 IST)
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் போட்டியில் தற்போது குவாலிஃபையர் போட்டிகள் நடந்து கொண்டிருப்பது தெரிந்ததே. முதல் குவாலிஃபையர் போட்டியில் வெற்றி பெற்று திண்டுக்கல் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் இன்று கோவை மற்றும் மதுரை அணிகளுக்கு இடையிலான 2வது குவாலிஃபையர் போட்டி நடைபெற்றது.
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோவை அனி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 125 ரன்கள் எடுத்தது. வெங்கட்ராமன் 45 ரன்களும், ராஜேஷ் 29 ரன்களும், முகுந்த் 28 ரன்களும் எடுத்தனர்.
 
இந்த நிலையில் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய மதுரை அணி18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ள மதுரை அணி வரும் 12ஆம் தேதி ஞாயிறு அன்று திண்டுக்கல் அணியுடன் இறுதி போட்டியில் மோதுகிறது. இந்த போட்டியில் வெல்லும் அணியே இந்த ஆண்டின் டி.என்.பி.எல் தொடரின் சாம்பியன் அணி ஆகும்
 
 

தொடர்புடைய செய்திகள்

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments