கால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனா மறைவு: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2020 (07:03 IST)
கால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனா மறைவு: அதிர்ச்சியில் ரசிகர்கள்
உலகின் மிகப் பெரிய கால்பந்தாட்ட வீரரான மாரடோனா சற்று முன்னர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 60
 
மாரடோனா மறைவு அவரது கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூளை அறுவை சிகிச்சைக்காக அர்ஜென்டினா தலைநகரில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்து குணமாகி அவர் வீடு திரும்பிய நிலையில் திடீரென இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது 
 
இதனை அடுத்து அவரை கவனித்துக் கொள்ள பிரத்யேகமாக நியமிக்கப்பட்டிருந்த செவிலியர் முதலுதவி கொடுத்துக் கொண்டிருக்கும் போதே அவரது உயிர் பிரிந்து விட்டதாக தெரிகிறது. மாரடோனாவின் மறைவை அவரது வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார் 
 
தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் கோல் மழை போட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்த மாரடோனா இன்று அதே ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி காலமாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments