Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி: தெலுங்கு டைட்டான்ஸ், புனே அணிகள் வெற்றி

Webdunia
சனி, 20 அக்டோபர் 2018 (07:54 IST)
புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த 7ஆம் தேதி ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் புனே அணிகள் வெற்றி பெற்றது.

நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி பாட்னா பைரேட்ஸ் அணியுடன் மோதியது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடி வந்த நிலையில் இரு அணிகளின் புள்ளிகளும் ஏறத்தாழ சமமாக இருந்து வந்தது. கடைசி நேரத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் 35-31 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் பாட்னா அணியை வீழ்த்தியது

இதேபோல் நேற்று நடைபெற்ற இன்னொரு ஆட்டத்தில் புனே அணி ஜெய்ப்பூர் அணி 29-25 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. இந்த நிலையில் இதுவரை 24 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஏ பிரிவில் புனே, மும்பை மற்றும் ஹரியானா அணிகள் முதல் மூன்று இடங்களிலும், பி பிரிவில் தெலுங்கு டைட்டன்ஸ், பாட்னா பைரேட்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் முதல் முன்று இடங்களிலும் உள்ளது. பி பிரிவில் உள்ள தமிழ் தலைவாஸ் அணி 7 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் உள்ளது

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments