ரியோவில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் 1.89 மீ. உயரத்தை தாண்டி மாரியப்பன் பாராலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் பதக்கத்தை பெற்றுள்ளார். இவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் மாரியப்பனுக்கு ரூ.75 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழக அரசு 2 கோடி பரிசு தொகையை அறிவித்துள்ளது.