Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருவழியாக கஷ்டப்பட்டு டிரா செய்தது தமிழ் தலைவாஸ்

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (21:50 IST)
புரோ கபடி போட்டியில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றான தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனில் படு மோசமாக விளையாடி வருகின்றது. தமிழ்தலைவாஸ் அணி கடைசியாக ஆகஸ்ட் 10ம் தேதி நடந்த குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது. அதன்பின் நடைபெற்ற 10 போட்டிகளில் 8 போட்டிகளில் தோல்வியும் இரண்டு போட்டிகளில் டிராவும் செய்தது 
 
 
இந்த நிலையில் இன்று புனே அணியுடன் தமிழ்தலைவாஸ் அணி மோதியது. இன்றைய போட்டியிலும் தமிழ் தலைவாஸ் டிரா செய்தது என்பது குறிப்பிடத்தக்கது, இன்றைய போட்டியில் புனே அணி ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், கடைசியில் சுதாரித்த தமிழ் தலைவாஸ் அணி கடைசி நிமிடங்களில் மளமளவென புள்ளிகளை எடுத்து போட்டியை டிரா செய்தது. போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா 36 புள்ளிகள் எடுத்து இருந்தன
 
 
முன்னதாக நடைபெற்ற இன்னொரு போட்டியில் மும்பை அணி உத்தரபிரதேச அணியை வீழ்த்தியது. மும்பை அணி 39 புள்ளிகளும் உத்தரப்பிரதேச 36 புள்ளிகளும் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இன்றைய போட்டியின் முடிவில்  வழக்கம்போல் டெல்லி, பெங்கால், ஹரியானா, பெங்களூர், மும்பை ஆகிய அணிகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments