Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி போட்டி: தமிழ் தலைவாஸ் அணிக்கு மேலும் ஒரு வெற்றி

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2018 (21:59 IST)
கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

ஆரம்பம் முதலே தமிழ் தலைவாஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். புள்ளிகள் மாறி மாறி முன்னிலை பெற்றதால் இறுதி வரை வெற்றி யாருக்கு என்ற த்ரில் பார்வையாளர்களுக்கு இருந்தது.

இந்த நிலையில் கடைசி சில நிமிடங்களில் பொறுப்புடன் விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 27-23 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இருப்பினும் அந்த அணி 20 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூர் அணி 40 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பாட்னா 33 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், பெங்கால் 31 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments