Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி போட்டி: தமிழ் தலைவாஸ் போராடி மீண்டும் தோல்வி!

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (22:36 IST)
புரோ கபடி போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி பல போட்டிகளில் கடைசி நேரத்தில் வெற்றியை கோட்டைவிட்டு வரும் நிலையில் இன்றைய போட்டியில் ஆரம்பத்தில் அதிக புள்ளிகளை பெற்றிருந்தாலும் இறுதியில் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வி அடைந்தது
 
இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 24 புள்ளிகளும், மும்பை அணி 29 புள்ளிகளும் பெற்றன. தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் கடைசி நேரத்தில் வெற்றிக்காக போராடியும் முடியவில்லை. தமிழ் தலைவாஸ் அணியின் நட்சத்திர வீரர் அஜய் தாக்கூர் இன்று ரைடில் மூன்று புள்ளிகள் மட்டுமே பெற்றார்.
 
அதேபோல் இன்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் குஜராத் அணி, பாட்னா அணியை 3 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. குஜராத் அணி 29 புள்ளிகளும், பாட்னா அணி 26 புள்ளிகளும் பெற்றன.
 
இன்றைய போட்டியின் முடிவில் ஜெய்ப்பூர், பெங்கால், டெல்லி ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களிலும், பெங்களூரு, ஹரியானா, குஜராத் ஆகிய அணிகள் அடுத்த மூன்று இடங்களீலும் உள்ளன. தமிழ் தலைவாஸ் அணி 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளதால் 7வது இடத்தில் உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் யாரும் தொடாத உச்சம்… அபிஷேக் ஷர்மா படைத்த சாதனை!

மன்னிப்பு கோரினார் பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி, ஆனால் கோப்பையை தர மறுப்பு!

ஆஸ்திரேலிய அணியை பொளந்து கட்டிய வைபவ் சூர்யவன்ஷி.. 8 சிக்ஸர்களுடன் மின்னல் வேக சதம்!

திலக் வர்மாவை அழைத்துப் பாராட்டிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியிலேயே இந்தியா அசத்தல் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments