Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி போட்டி: தமிழ் தலைவாஸ் அணி போராடி தோல்வி

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (07:46 IST)
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் புரோ கபடி போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி ஜெய்ப்பூர் அணியுடன் மோதி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது
 
தமிழ் தலைவாஸ், ஜெய்ப்பூர் என இரு அணிகளும் புள்ளிகளை மாறி மாறி எடுத்து முன்னணி வந்து கொண்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் தமிழ் தலைவாஸ் அணி கோட்டவிட்டதால் ஜெய்ப்பூர் அணி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெய்ப்பூர் அணி 28 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் அணி 26 புள்ளிகளும் எடுத்தன. தமிழ் தலைவாஸ் அணியின் அஜய்தாக்கூர் மற்றும் ராஹுல் செளத்ரி தலா 6 புள்ளிகளை ரெய்டில் எடுத்து கொடுத்தனர்
 
இதனையடுத்து நடைபெற்ற இன்னொரு போட்டியில் பெங்களூரு மற்றும் புனே அணிகள் மோதின. இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த புனே அணி 31 புள்ளிகளும், பெங்களூரு அணி 23 புள்ளிகளும் பெற்றதையடுத்து புனே அணி 8 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
இந்த நிலையில் புள்ளிகள் பட்டியலில் ஜெய்ப்பூர், டெல்லி, பெங்கால் ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களிலும், பெங்களூரு, ஹரியானா, தமிழ் தலைவாஸ் ஆகிய அணிகள் அடுத்த மூன்று இடங்களிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments