Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி: மீண்டும் தோல்வி பாதைக்கு திரும்பிய தமிழ் தலைவாஸ்

Webdunia
புதன், 9 அக்டோபர் 2019 (22:32 IST)
புரோ கபடி போட்டி தொடரில் தமிழ்தலைவாஸ் அணி கடந்த திங்கட்கிழமை ஜெய்ப்பூர் அணிக்கு எதிராக போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இன்று மீண்டும் தோல்வி பாதைக்கு திரும்பி உள்ளது

இன்று நடைபெற்ற பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது

புரோ கபடி போட்டி தொடரில் தொடர் தோல்விகளை பெற்று வந்த தமிழ் தலைவாஸ் அணி கடந்த திங்களன்று ஜெய்ப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் வென்றதால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பி விட்டது என தமிழ் தலைவாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்காத வகையில் இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாசல் தோல்வியுற்றது. இன்றைய வெற்றியின் மூலம் பெங்கால் அணி முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது

இன்று நடைபெற்ற போட்டியில் பெங்கால் அணி 33 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் அணி 29 புள்ளிகளும் பெற்றதை அடுத்து பெங்கால் அணி அதிரடியாக வெற்றி பெற்றது

இதனை அடுத்து இன்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி உபி அணியை வென்றது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 41 புள்ளிகளும் உபி அணி 36 புள்ளிகளும் எடுத்ததால் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 5 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இந்த நிலையில் பெங்கால், டெல்லி, ஹரியானா, உபி மற்றும் மும்பை ஆகிய அணிகள் முதல் ஐந்து இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments