Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி டி20 போட்டி ரத்து: ட்ராவில் முடிந்த தொடர்!!

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2017 (21:19 IST)
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. 


 
 
இந்தியா வந்த ஆஸ்திரேலியா அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் தோல்வியுற்றது. இதனால் டி20 போட்டி தொடரில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது.
 
நடைபெற்ற முதல் இரண்டு போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சம நிலை வகித்தது.
 
இந்நிலையில் ஐதராபாத்தில் மூன்றாவது டி20 போட்டி நடக்க இருந்தது. ஆனால், நேற்று அங்கு பலத்த மழை பெய்ததால் மைதனாத்தில் ஈரப்பதம் அதிக அளவில் காணப்பட்டது.
 
இதனால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.  நீண்ட நேரமாகியும் மைதானத்தை தயார் செய்ய முடியாத காரணத்தினால், அம்பயர்கள் போட்டியை ரத்து செய்வதாக அறிவித்தனர்.
 
இதனால் இரு அணிகளுக்கும் சமமான புள்ளிகள் வழங்கப்பட்டு டி20 தொடர் ட்ராவில் முடிக்கப்பட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments