Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓராண்டு பிறகு மீண்டும் களமிறங்கும் சுரேஷ் ரெய்னா!!

ஓராண்டு பிறகு மீண்டும் களமிறங்கும் சுரேஷ் ரெய்னா!!
, வெள்ளி, 7 அக்டோபர் 2016 (11:58 IST)
நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான, தோனி தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் அஸ்வின், ஜடேஜா, ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, சுரேஷ் ரெய்னா மீண்டும் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 
நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி தேர்வு, எம்எஸ்கே பிரசாத் தலைமையில் நடந்தது. புதிதாக பொறுப்பேற்றுள்ள தேர்வுக்குழு, முதல் முறையாக இந்திய அணியை தேர்ந்தெடுத்து அறிவித்தது.
 
இதில், ஓராண்டு இடைவெளிக்கு பிறகு சுரேஷ் ரெய்னா அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 
கடந்த டிசம்பர்-ஜனவரி ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற இந்திய ஒருநாள்போட்டி அணியில் ரெய்னா தேர்வு செய்யப்படவில்லை. 
 
அதேபோல், ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவில் மே.இ.தீவுகளுக்கு எதிராக நடந்த டி20 தொடரிலும் ரெய்னா தேர்வு செய்யப்படவில்லை. 
 
இந்திய ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள்:
 
தோனி (கேப்டன்), ரோஹித் சர்மா, அஜிங்கிய ரஹானே, விராட் கோலி, மணிஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஜெயந்த் யாதவ், அமித் மிஸ்ரா, ஜஸ்பிரித் பும்ரா, தவல் குல்கர்னி, உமேஷ் யாதவ், மந்தீப் சிங், கேதர் ஜாதவ்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’தோனியிடம் தான் இந்த வித்தையை கற்றுக்கொண்டேன்’ - விராட் கோலி