Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மைதானத்திலும் எங்களால் வெல்ல முடியும்: சுப்மன் கில் நம்பிக்கை

Webdunia
திங்கள், 22 மே 2023 (15:12 IST)
சென்னை மைதானத்தில் எங்களால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என குஜராத் அணியின் பேட்ஸ்மேன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். 
 
2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் லீக் போட்டிகள் முடிவடைந்து தற்போது பிளே ஆப் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் பிளே ஆப் போட்டி நாளை  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. 
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் செஞ்சுரி அடித்த சுப்மன் கில் பேட்டி அளித்தபோது ’சென்னை மைதானத்தில் எங்களால் சிறப்பாக விளையாட முடியும் என்றும் எங்களிடம் சிறந்த பௌலிங் இருப்பதால் சென்னையில் எங்களால் வெல்ல முடியும் என்று தெரிவித்தார். 
 
மேலும் இரண்டாவது முறையாக எங்கள் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது என்றும் என்னுடைய விளையாட்டை நான் சிறப்பாக விளையாடேன் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவு இருக்கும் நிலையில் சென்னை அணியை குஜராத் அணி வெல்லுமா என்பதை நாளை வரை போர் திறந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments