Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநில அளவிலான காலடி குத்து வரிசை சாம்பியன்ஷிப் சிலம்பாட்டம் லீக் போட்டி!

J.Durai
புதன், 7 ஆகஸ்ட் 2024 (10:10 IST)
சென்னை அடையாறில் அமைந்துள்ள இளைஞர் விடுதியில் உலகத் தமிழ் பாரம்பரிய காலடி குத்து வரிசை விளையாட்டு சங்கம் மற்றும் உலக பாரம்பரிய சிலம்பாட்ட கூட்டமைப்பு சங்கமும் இணைந்து மாநில அளவிலான காலடி குத்து வரிசை சாம்பியன்ஷிப் சிலம்பாட்டம் லீக் போட்டி நடைபெற்றது.
 
இந்தப் போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 300- க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 
2014 -ஆம் ஆண்டு முதல் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு நடத்தும் முதல் போட்டியாகும்.
 
இப் போட்டியானது  மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது.
 
இதனைத் தொடர்ந்து உலக பாரம்பரிய சிலம்பாட்ட கூட்டமைப்பு சங்க தலைவர் கண்ணன் பேசியதாவது......
 
தமிழக அரசு சிலம்பம்  விளையாட்டை அங்கீகரித்தது போல் இந்த காலடி குத்து வரிசை விளையாட்டையும் அங்கீகரிக்க வேண்டும்.
 
தேசிய அளவில் இந்த விளையாட்டுப் போட்டியை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இந் நிகழ்வின் போது உலக பாரம்பரிய சிலம்பாட்ட கூட்டமைப்பு சங்க துணைத் தலைவர் மணிகண்டன், செயலாளர் அருண், பொருளாளர் ஆருண், மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள சிலம்பாட்ட ஆசன்கள் பல பேர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேவலமான பேட்டிங்.. மைதானத்தை விட்டு வெளியேறும் சிஎஸ்கே ரசிகர்கள்..!

Power Playயில் மோசமான தொடக்கம்.. 20 டாட் பால்கள்.. 2 விக்கெட்டுக்கள்.. தலைநிமிராத சிஎஸ்கே..!

டாஸில் தோல்வி அடைந்த தோனி.. கொல்கத்தா எடுத்த முடிவு என்ன? ஆடும் 11 பேர்கள் யார் யார்?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணியில் இணைவது யார்?... நான்கு பேர் லிஸ்ட்டில்!

துரோகி வறான் பாரு.. ப்ராவோ வந்தபோது தோனி சொன்ன அந்த வார்த்தை! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments