Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தாவில் முதல் டெஸ்ட் போட்டி: ஆடுகளத்தை பார்வையிட்ட இலங்கை அணி

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2017 (06:35 IST)
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இலங்கை அணி வரும் 16ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. ஏற்கனவே இலங்கை அணி போர்டு பிரசிடென்ட் லெவன் 2 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் மோதியது. இந்த ஆட்டம் ஆட்டம் டிராவில் முடிந்தது


 


இந்த நிலையில் நேற்று இலங்கை அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தை பார்வையிட்டனர். ஆடுகளத்தின் ஒருபகுதியை உன்னிப்பாக கவனித்த இலங்கை அணி வீரர்கள் ஆடுகள பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜியிடம் தங்கள் சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றதாக கூறப்படுகிறது.

இதே மைதானத்தில் தான் கடந்த 1996ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடையும் நிலை இருந்ததால் ரசிகர்கள் ஏற்படுத்திய பிரச்சனை காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments