Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்பெயின் கால்பந்து வீரர் சேபி அலோன்சோ திடீர் ஓய்வு

ஸ்பெயின் கால்பந்து வீரர் சேபி அலோன்சோ திடீர் ஓய்வு
, வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (11:21 IST)
ஸ்பெயின் நாட்டின் கால்பந்து வீரரான சேபி அலோன்சோ சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் ஸ்பெயின், போர்ச்சுகல், பிரேசில் போன்ற சவாலான அணிகள் கோப்பையை வெல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்ப்பார்ப்புக்கு நேர்மாறாக ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற முன்னனி அணிகள் முதல் சுற்றிலேயே வெளியேறின. இதனால் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஆண்ட்ரேஸ் இனியஸ்டா, ஷேவி ஹெர்னான்டஸ் ஆகியோர் தனது ஓய்வு முடிவைக் கடந்த மாதம் அறிவித்தனர்.

இந்நிலையில் மீண்டும் ஸ்பெயின்  நாட்டு கால்பந்து வீரரான சேபி அலோன்சோ சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இவர் 2003 ஆம் ஆண்டில் அறிமுகமானார்.

சேபி அலோன்சோ இதுவரை 114 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil