Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய தொடரில் கைகுலுக்க மாட்டோம் – மார்க் பவுச்சர் அறிவிப்பு !

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2020 (07:35 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலானப் போட்டியின் போது இரு நாட்டு வீரர்களும் கைகுலுக்கிக் கொள்ள மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணி இன்று இந்தியா வந்தடைந்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தொடரின் போது கிரிக்கெட்டின் பாரம்பர்யமான போட்டி முடிவடைந்த பின்னர் இரு நாட்டு வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வதற்கு தென் ஆப்பிரிக்க அணி தடை விதித்துள்ளது. இதுகுறித்து அந்த அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் ‘கைகுலுக்குவதன் மூலம் கிருமிகள் பரவுவதாக சொல்லப்படுவதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments