2வது டி20 கிரிக்கெட்: வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்து வீசியும் இந்தியா தோல்வி..

Siva
திங்கள், 11 நவம்பர் 2024 (07:15 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில், வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்திய போதிலும், தென்னாப்பிரிக்க அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹர்திக் பாண்டியா மட்டுமே ஓரளவு நிலைத்து விளையாடி 39 ரன்கள் எடுத்தார். சஞ்சு ஜான்சன், அபிஷேக் ஷர்மா, கேப்டன் சூர்யா குமார் ஒற்றை இலக்கங்களில் ரன்கள் எடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
 
இதனை அடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி ஆரம்பத்திலிருந்து திணறினாலும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் அபாரமாக விளையாடி 47 ரன்கள் எடுத்தார். வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்தியபோதிலும், 19 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. ஆட்ட நாயகனாக ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
 
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நவம்பர் 13ஆம் தேதியும், நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி நவம்பர் 15ஆம் தேதியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments