Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி - கோப்பையை தவறவிட்ட பி.வி.சிந்து

Webdunia
திங்கள், 16 ஜூலை 2018 (15:59 IST)
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் பங்குபெற்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பானின் ஒக்குஹாராவிடம் தோல்வியடைந்தார்.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒக்குஹாராவை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை சிந்து ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஒக்குஹாராவின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினார்.
 
முதல் சுற்றில் 21-15 என்ற கணக்கில் சிந்து தோல்வியை தழுவினார். பின்னர் இரண்டாம் ஆட்டத்தில் 11-9 என்ற நிலையில் முன்னிலை பெற்ற சிந்து தொடர்ந்து அதை தக்க வைக்க முடியவில்லை. பின்பு, 18-18 என்ற சம நிலையை எட்டியது ஆட்டம். அதன் பின் ஒக்குஹாரா தொடர்ந்து மூன்று புள்ளிகளை அதிரடியாக பெற்று, ஆட்டத்தை தன் வசமாக்கினார்.
இதன்மூலம் சிந்து இந்த போட்டியில் தோல்வியை தழுவினார். இதேபோல் சிந்து இந்த வருடத்தில் நடைபெற்ற இந்தியா ஓபன் மற்றும் காமன்வெல்த் இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்து தங்கப்பதக்கம் வெல்லும் வாய்பை நழுவவிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் அணியாக ஃபைனலுக்கு சென்றது பெங்களூரு.. படுதோல்வி அடைந்த பஞ்சாப்..!

101க்கு ஆல்-அவுட்.. முக்கியப் போட்டியில் கோட்டை விட்டதா பஞ்சாப்? பெங்களூரு பவுலிங் அபாரம்..!

பவர்ப்ளேயில் ஆர்சிபியின் ஆதிக்கம்.. விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் பஞ்சாப்! RCB vs PBKS Live updates in Tamil

நேரடியாக ஃபைனலுக்கு போவது யார்? டாஸ் வென்ற ஆர்சிபி எடுத்த முடிவு..!

நான் தேர்வாளர் இல்லை… ஸ்ரேயாஸ் ஐயர் குறித்தக் கேள்விக்கு கம்பீர் காட்டமான பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments