Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் நாயகன் விருது வார்னருக்குக் கொடுத்திருக்கக் கூடாது… பாகிஸ்தான் வீரர் புலம்பல்!

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (15:46 IST)
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் வார்னருக்கு தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் சமீபகாலமாக மோசமான ஆட்டத்திறனால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக தான் தலைமை ஏற்று கோப்பையை வென்று கொடுத்த ஐபிஎல் அணியில் இருந்து நீக்கப்பட்டு மைதானத்துக்குள்ளே கூட வரமுடியாத அளவுக்கு மோசமாக நடத்தப்பட்டார். ஆனால் உலகக்கோப்பை தொடரில் விஸ்வரூபம் எடுத்து 7 இன்னிங்ஸ்களில் 289 ரன்களை சேர்த்து தொடர் நாயகன் விருதைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் வார்னருக்கு விருது கொடுக்கப்பட்டதற்கு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். அவர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசமுக்குதான் கொடுக்கப்படும் என எதிர்பார்த்ததாகக் கூறியுள்ளார். பாபர் ஆசம் இந்தம் தொடரில் 303 ரன்கள் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments