Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பின் பாலை நன்றாக விளையாடுவார் என நினைத்தோம்… நல்லா நினச்சிங்க போங்க!

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (16:53 IST)
நேற்றைய போட்டியில் மிகவும் மோசமாக விளையாடிய கேதார் ஜாதவ்வை ஏன் பிராவோக்கு முன்னர் இறக்கினோம் என்பது குறித்து பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய தோல்விக்கு மிக முக்கியமானக் காரணமாக சொல்லப்படுவது கேதார் ஜாதவ்வின் டெஸ்ட் இன்னிங்ஸ்தான். இக்கட்டான நேரத்தில் இறங்கி ரன்களை சேர்க்க வேண்டிய நேரத்தில் அவர் 12 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனால் கடுப்பான சிஎஸ்கே ரசிகர்கள் அவரைக் கண்டபடி திட்ட ஆரம்பித்துள்ளனர். காலை முதல் சமூகவலைதளங்கள் முழுவதும் கேதார் ஜாதவ் டிரோல்களும் மீம்ஸ்களுமாக பரவி வருகின்றன. மேலும் கேதார் ஜாதவ்வை அணியில் இருந்து நீக்கவேண்டும் என ஆன்லைனில் பெட்டிஷன் எல்லாம் உருவாக்கியுள்ளார்கள்.

இந்நிலையில் அதிரடி பேட்ஸ்மேன் பிராவோ இருக்கும்போது ஏன் கேதார் ஜாதவ்வை முன் கூட்டியே இறக்கினோம் என்று பிளமிங் கூறியுள்ளார். அவர் ‘சுழல்பந்துகளை நன்றாக விளையாடுவார் என நம்பிதான் அவரை இறக்கினோம். ’ எனக் கூறியுள்ளோம். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாழ்க்கை ஒரு வட்டம்.. சிஎஸ்கேவில் தொடங்கிய பயணம் சிஎஸ்கேவில் முடிந்த்தது.. நன்றி அஸ்வின்..!

ஐபிஎல் போட்டியில் இனி விளையாட மாட்டேன்.. அஸ்வின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஃபிட்னெஸுக்கான ‘யோ யோ’ தேர்வில் பங்குபெறும் ரோஹித் ஷர்மா?

ஆஸி முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க்கு தோல் புற்றுநோயா? சிகிச்சைக்குப் பின் பதிவு!

ஆன்லைன் சூதாட்ட செயலிகள் தடை… 200 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments