Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்ஆப்பிரிக்க கால்பந்து கேப்டன் சென்சோ மேயிவா கொள்ளையர்களால் சுட்டுக்கொலை

Webdunia
திங்கள், 27 அக்டோபர் 2014 (14:47 IST)
தென்ஆப்பிரிக்க கால்பந்து கேப்டன் சென்சோ மேயிவா கொள்ளைக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
 
அக், 26 நேற்று இரவு சென்சோ மேயிவா வீட்டில் இருந்த போது இரண்டு பேர் திடீரென அவரது வீட்டிற்குள் நுழைந்தனர். வீட்டிற்குள் நுழைந்த அந்த மர்ம நபர்கள் கேப்டன் சென்சோவிடம் மொபைல் போனை தருமாறு மிரட்டியுள்ளனர். 
சென்சோ மேயிவா மொபைல் போனை தர மறுத்ததால் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு மர்மநபர்கள் தப்பி ஓடி விட்டனர். உடனே  சென்சோ மேயிவாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். 
 
மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பற்றி தகவல் கொடுத்தாலோ அல்லது ஒப்படைத்தாலோ 13,700 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று அந்நாட்டு காவல்துறை  அறிவித்துள்ளது.

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

Show comments