Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்கஸன் விதிகளை இந்தியா மீறியுள்ளது – சஞ்சய் மஞ்சரேக்கர் குற்றச்சாட்டு!

Webdunia
சனி, 5 டிசம்பர் 2020 (15:49 IST)
நேற்றைய டி 20 போட்டியில் இந்திய அணி கன்கஸன் விதிகளை மீறிவிட்டதாக சஞ்சய் மஞ்சரேக்கர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டி நேற்று கான்பெராவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. இந்திய அணியைச் சேர்ந்த கே எல் ராகுல் 51 ரன்களும், ஜடேஜா 44 ரன்களும் அதிரடியாக சேர்த்தனர். பேட்டிங் செய்யும் போது இந்திய அணியின் ஜடேஜா காயம் அடைந்தார். இதனால் அவருக்கு பதிலாக கன்கஸன் விதிகளின் படி மாற்று வீரராக சஹால் தேர்வு செய்யப்பட்டு அவர் சிறப்பாக பந்துவீசி ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

இந்நிலையில் சஹாலை எடுத்தது குறித்து முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் அளித்த நேர்காணலில் ‘இந்தியா கன்கஸன் விதிகளை மீறியுள்ளதாகவே நான் நினைக்கிறேன். ஜடேஜாவுக்கு உண்மையாகவே காயம்பட்டு இருந்தால் களத்துக்கு உடல்தகுதி நிபுணர் வந்திருக்க வேண்டும். ஆனால் அதன் பிறகு ஜடேஜா 4 பந்துகளை விளையாடிவிட்டு பெவிலியன் திரும்பி தன்னால் விளையாட முடியாது என்று சொன்னதால் நடுவர் டேவிட் பூனுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை.’ எனக் கூறியுள்ளார். ஆனால் ஜடேஜா காயம் காரணமாக அடுத்த இரண்டு டி20 போட்டியில் இருந்தும் வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments