இங்கிலாந்தில் காபி குடித்து மகிழும் இந்திய வீரர்கள்; சந்தீப் பட்டீல் விமர்சனம்

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (16:02 IST)
இங்கிலாந்து மண்ணில் இந்திய வீரர்கள் காபி குடித்து மகிழ்கிறார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவர் சந்தீப் பட்டீல் கேலி செய்யும் விதத்தில் விமர்சித்துள்ளார்.

 
இங்கிலாந்து செல்வதற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, இங்கிலாந்து சென்றதும் அங்குள்ள வீதிகளில் ஜாலியாக காபி அருந்தி மகிழ்வேன் என்று கூறினார். அதை தற்போது முன்னாள் இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் சந்தீப் பட்டீல் கேலி செய்யும் விதத்தில் விமர்சித்துள்ளார்.
 
இந்திய அணி இங்கிலாந்து எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது. குறிப்பாக இரண்டாவது போட்டியில் இந்திய வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பலரும் இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 
சந்தீப் ப்ட்டீல் கூறியதாவது:-
 
இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. ஆனால் கோஹ்லியும், ரவி சாஸ்திரியும் சேர்ந்து வீரர்களுக்கு ஓய்வு தேவை என்று கூறி 4 நாட்கள் நடக்க இருந்த போட்டியை மூன்று நாட்களோடு முடித்து கொண்டனர்.
 
கங்குலி, தெண்டுல்கர், கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் தங்களை கவலையை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் அறிவுரையை இந்திய வீரர்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டது போல் தெரியவில்லை.
 
ஏற்கனவே 70% போட்டி முடிவடைந்துவிட்ட நிலையில் இந்திய வீரர்கள் இன்னும் காபி குடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments