Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலிமை தான் காரணம்: இந்திய அணி வெற்றிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (07:50 IST)
நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
உலகமே எதிர்பார்த்த நேற்றைய இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. குறிப்பாக விராட் கோலி ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிபெறச் செய்தனர் 
 
இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் சிறப்பாக பந்து வீசினாலும் நெருக்கடியான சூழலில் வேகப்பந்து வீச்சாளர்களின் உடல் வலிமைதான் இறுதியில் வெற்றியை தீர்மானித்துள்ளது என இந்திய அணியின் வெற்றியை குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்
 
விராட் கோலி ஜடேஜாவின் உதவியுடன் இறுதிவரை சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார் ஹர்திக் பாண்டியா என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் இந்திய அணி வெற்றி குறித்த புகைப்படங்களையும் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments