Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிரா அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட்!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (17:59 IST)
ஐபிஎல் தொடரில் கலக்கிய ருத்துராஜ் கெய்க்வாட் மகாராஷ்டிரா அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிஎஸ்கே அணியின் இந்த சீசனுக்கான வெற்றியில் தொடக்க ஆட்டக்காரரான ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு மிகப்பெரிய பங்குண்டு. நேற்றைய வெற்றியிலும் முக்கியமானக் கட்டத்தில் 70 ரன்களை சேர்த்தார். இந்நிலையில் நேற்று அவர் இந்த சீசனில் 600 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் ஆனார். கே எல் ராகுல் 626 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ருத்துராஜ் 602 ரன்கள் சேர்த்துள்ளார்.

சென்னை அணிக்காக இதற்கு முன்னர் மைக் ஹஸ்ஸி மற்றும் அம்பாத்தி ராயுடு ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் அசாத்திய திறமையால் இப்போது அவருக்கு மிகப்பெரிய வெளிச்சம் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் மகாராஷ்டிரா அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் நவம்பர் 4 ஆம் தேதி இந்த கோப்பை தொடர் தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments