ஒலிம்பிக்கில் ரஷ்யாவுக்கு தடைவிதிக்க வேண்டும்- டென்னிஸ் வீராங்கனை எலினா

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (19:42 IST)
உக்ரைன்  நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து 1 ஆண்டை நெருங்கியுள்ளது. உக்ரைன் நாட்டிற்கு மேற்கத்திய நாடுகளும், அமெரிக்கவும்  ஆயுத உதவியும், நிதி உதவியும் செய்து வருகின்றன.

இதனால், தற்போது வரை உக்ரைன் நாடு வல்லரசு நடான ரஷ்யாவை துணிவுடன் எதிர்கொண்டு வருகிறது.

இதனால் இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கான மக்களும், ராணுவத்தினரும் உயிரிழந்துள்ளன.

இப்போர் முடிவுக்கு வர வேண்டுமென்பதுதான் உலக நாடுகளின் கோரிக்கையாக உள்ளது.

இந்த நிலையில்,  கடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற உக்ரைன் நாட்டு வீராங்கனை எலினா ஸ்விடோலினா,  2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடக்கும்  ஒலிம்பிக் போட்டியில் இருந்து ரஷ்யா மற்றும் பெலரஷ்யா வீரர்களுக்குத் தடை விதிக்க வேண்டுமென கூறியுள்ளார்.

ஒருவேளை ரஷ்யா நாடு வீரர்களை ஒலிம்பிக் போட்டிற்கு அனுமதித்தால் நாங்கள் போட்டியைப் புறக்கணிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் பிரீமியர் லீக் 2026 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் ஆர்சிபி - மும்பை மோதல்!

ஆசிய கோப்பை U-19 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. வைபவ் சூர்யவன்ஷி கேப்டன் இல்லையா?

இந்திய மகளிர் அணியின் அடுத்த இலக்கு டி20 உலகக்கோப்பை.. இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் மோதல்..!

இந்திய வீரர்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்த முன்னாள் கேப்டன் தோனி!

கம்பீர் மீது தவறு இருக்கலாம்… ஆனால் முழுவதும் அவரே காரணமா? –அஸ்வின் ஆதரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments