Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரன் எடுத்தவரை புகழ்ந்து ரன் கொடுத்தவரை மறந்தாச்சு...

Webdunia
செவ்வாய், 20 மார்ச் 2018 (16:19 IST)
இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - வங்காள தேச அணிகள் மோதின. இதில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. 
 
இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவரில் 35 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், கடைசி இரண்டு ஓவர்கள் மிகவும் விறுவிறுப்பாக சென்றது. 
 
போட்டியின், 18 வது ஓவரை முஷ்டாபிஜூர் ரஹ்மான் வீசினார். லெக் பை மூலம் ஒரு ரன் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். கடைசி இரண்டு ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. 
 
19 வது ஓவரை ருபெல் ஹொசைன் வீசினார். இவர் அனுபவ வீரர் என்பதால் அதிகபட்சம் 15 ரன்கள் விட்டுக்கொடுத்தாலும், போட்டியில் வென்ரு விடலாம் என வங்கதேச அணி கணக்கு போட்டது. 
 
இப்போதுதான் தினேஷ் கார்த்திக் களமிறக்கினார். ருபெல் ஹொசைன் வீசிய பந்துகளில் ஒன்ரை மட்டும் விட்டுவிட்டு அந்த ஓவரில் 22 ரன்கள் அடித்தார். இந்த அணியில் வெற்றிக்கு இந்த ஓவர் முக்கிய திருப்புமுனையாக இருந்தது. 
 
அதேபோல், வங்கதேசத்தின் தோல்விக்கும் இது முக்கிய காரணமாக இருந்தது. எனவே, முக்கியமான ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்த ருபெல் ஹொசைன் வங்காள தேச ரசிகர்களிடம் மன்னிப்பு  கேட்டு வருந்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விசில்போடு vs பல்தான்ஸ்: சென்னை சேப்பாக்கத்தில் CSKvMI மோதல்! - டிக்கெட் விற்பனைக்கு கட்டுப்பாடு!

நீங்க அதப் பாத்தீங்களா..? விண்டேஜ் சிக்ஸரை ரி க்ரியேட் செய்த சச்சின்.. பூரித்துப் போன ரசிகர்கள்!

சாம்பியன்ஸ் கோப்பை நடத்தியதால் 860 கோடி ரூபாய் நஷ்டமா…சிக்கலில் பாகிஸ்தான் வாரியம்!

நான் எதிர்கொண்டதிலேயே கடினமான பவுலர்கள் இவர்கள்தான்.. தோனி ஓபன் டாக்!

கோலி சார் இந்தாங்க உங்க கப்..! புண்படுத்துறீங்களே! - வைரலாகும் ஐபிஎல் விளம்பரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments