Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையை வீழ்த்திய ராஜஸ்தான்: அடுத்த சுற்றுக்கு செல்லுமா?

Webdunia
திங்கள், 14 மே 2018 (06:09 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பையை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது.
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை 168 ரன்கள் அடித்தது. லீவிஸ் 60 ரன்களும், யாதவ் 38 ரன்களும் பாண்ட்யா 36 ரன்களும் அடித்தனர்.
 
எனவே 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி, அதிரடியாக விளையாடி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  இந்த அணியின் பட்லர் மிக அபாரமாக விளையாடி 37 பந்துகளில் 94 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டதோடு, ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார். 
 
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 6 வெற்றி 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் நல்ல ரன்ரேட்டில் ராஜஸ்தான் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இந்த அணி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments