Webdunia - Bharat's app for daily news and videos

Install App

146 ரன்களில் சுருண்டது ஐதராபாத்: பெங்களூருக்கு வெற்றி கிடைக்குமா?

Webdunia
திங்கள், 7 மே 2018 (22:06 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 39வது ஆட்டத்தில் பெங்களூர் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராத் கோஹ்லி, முதலில் பந்துவீச முடிவு செய்தார். 
 
இதனால் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் 56 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 35 ரன்களும் எடுத்தனர். பெங்களூரு அணியை பொருத்தவரையில் செளதி மற்றும் முகம்மது சிராஜ் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
 
இந்த நிலையில் 147 என்ற இலக்கை நோக்கி பெங்களூர் அணி விளையாடி வருகிறது. இன்றைய போட்டி பெங்களூரு அணிக்கு மிக முக்கிய போட்டி ஆகும். இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் 8 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு செல்ல ஒரு வாய்ப்பு பெங்களூரு அணிக்கு கிடைக்கும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments