Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி விட்டுச் சென்ற இடத்தை தக்கவைக்க வேண்டும்… ரோஹித் ஷர்மா!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (11:14 IST)
இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்கிறார் ரோஹித் ஷர்மா. அவர் தலைமையில் இன்று இந்திய அணி இலங்கையை எதிர்த்து விளையாடுகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகியதை அடுத்து இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் முதல் போட்டியில் இன்று இந்தியா இலங்கையை எதிர்த்து விளையாடுகிறது. இது கோலியின் 100 ஆவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரோஹித் ஷர்மா டெஸ்ட் போட்டிகளை தலைமை தாங்குவது குறித்து பேசியுள்ளார். அதில் ‘எந்த வகையான போட்டியாக இருந்தாலும் சரி, நான் அதிகமாக நிகழ்காலத்துக்காக யோசிக்கவே விரும்புகிறேன். எதிர்காலத்துக்காக மிக அதிகமாக யோசிப்பதில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக கோலி செய்திருப்பது மிகவும் சிறப்பானது. நாங்கள் செய்ய வேண்டியது அவர் விட்டு சென்ற இடத்தை தக்கவைப்பதுதான்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணிக்குப் பயிற்சிப் போட்டிகள் கிடையாதா?... காரணம் இதுதான்!

கேப்டனாக அதிக வெற்றிகள்… ரோஹித் ஷர்மா எட்டிய புதிய மைல்கல்!

ரோஹித் சர்மா அபார சதம்.. 305 இலக்கை அசால்ட்டாக எட்டிய இந்தியா..!

2வது ஒருநாள் போட்டி.. இங்கிலாந்து நிதான ஆட்டம்.. விக்கெட் எடுத்த ஜடேஜா, வருண்..!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி.. ஆஸ்திரேலியா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments