Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தா அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்த உத்தப்பா

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (21:15 IST)
இன்றைய போட்டியில் முதல் பேட்டிங் செய்து வரும் கொல்கத்தா அணியின் வீரர் ராபின் உத்தப்பா அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா - டெல்லி ஆகிய அணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற டெல்லி பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியுள்ளது. 
 
தொடக்க வீரர் சுனில் நரேன் 1 ரன்களுடன் இரண்டாவது ஓவரிலே வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா அதிரடியாக ரன்கள் குவித்து கொல்கத்தா அணி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். இவர் 19 பந்துகளில் 3 சிக்ஸருடன் 35 குவித்தார்.
 
15 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி தற்போது 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

கௌதம் கம்பீருக்குமா கட்டுப்பாடு… கறாராக சொன்ன பிசிசிஐ!

இலங்கையிடம் ஒருநாள் போட்டி தொடரை இழந்த ஆஸ்திரேலியா.. ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளியா?

என்னை கிங் என்று அழைக்காதீர்கள்… பாபர் ஆசம் வேண்டுகோள்!

இப்போதைக்கு ரிஷப் பண்ட்டுக்கு தேவை இல்லை… சூசகமாக பதில் சொன்ன கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments