Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் சாதனையைத் தகர்த்த ரிஷப் பண்ட்!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (10:29 IST)
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மிகக்குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 100 பேரை ஆட்டமிழக்க செய்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனிக்குப் பிறகு அதிரடி பேட்ஸ்மேன் + விக்கெட் கீப்பராக உருவாகி வருகிறார் ரிஷப் பண்ட். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் சிறப்பான சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதுவரை அவர் விளையாடிய 26 டெஸ்ட் போட்டிகளில் (50 இன்னிங்ஸ்) 100 பேரை ஆட்டமிழக்க செய்துள்ளார். இதில் 92 கேட்ச்களும் 8 ஸ்டம்பிங்குகளும் அடக்கம். இந்திய விக்கெட் கீப்பர்களில் குறைவான போட்டிகளில் 100 பேரை ஆட்டமிழக்கச் செய்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கேப்டன் தோனி 36 டெஸ்ட் போட்டிகளில் 100 பேரை ஆட்டமிழக்க செய்ததே சாதனையாக இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஓவரில் 2 விக்கெட்.. 8 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா.. பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுக்கள்..

காயம்பட்ட சிங்கம்.. ரிஷப் பண்ட் காயத்தோடு விளையாடுவார்! - பிசிசிஐ அறிவிப்பு!

நான்காவது டெஸ்ட்டில் இருந்து வெளியேறுகிறாரா ரிஷப் பண்ட்?

விளையாட்டு முன்னே சென்றுவிடும்…நீங்கள் பின்தங்கி விடுவீர்கள்- ஹர்பஜன் சிங் சூசக கருத்து!

U-19 டெஸ்ட் தொடர்.. அதிவேக சதம் அடித்து சாதனை செய்த ஆயுஷ் மகாத்ரே

அடுத்த கட்டுரையில்
Show comments