Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒவ்வொரு டாட் பந்துக்கும் 500 மரங்கள்..டாடா-பிசிசிஐ அசத்தல் திட்டம்..!

Webdunia
புதன், 24 மே 2023 (08:19 IST)
நேற்று நடைபெற்ற போட்டியில் டாட் பால் வந்தபோதெல்லாம் மரம் காண்பிக்கப்பட்டது. இது எதற்காக என்று பலரும் குழப்பமான சூழ்நிலையில் இருந்ததை அடுத்து இது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 
நேற்றைய போட்டியில் பந்து பேச்சாளர்கள் வீசும் ஒவ்வொரு டாட்பாலுக்கும் 500 மரங்கள் நடுவதற்கு டாடா மற்றும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து நேற்று நடைபெற்ற அத்தனை டாட் பால் பால்களையும் கணக்கிட்டு அதை 500 ஆல் பெருக்கி அத்தனை மரங்கள் இந்தியா முழுவதும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 
 
இந்த ஐபிஎல் சீசனை டாடா நிறுவனம் வழங்கி வரும் நிலையில் டாடா மற்றும் பிசிசிஐ ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து இந்த மரங்களை நட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக நேற்று அதிக அளவில் டாட் பால்கள் வீசப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான மரங்கள் நடுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments