Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திறமையும் தகுதியும் தேவை: தோனியை மறைமுகமாக தாக்கும் ரவி சாஸ்திரி!!

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2017 (17:20 IST)
வரும் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முழுமையான உடற்தகுதியும் திறமையும் கொண்டவர்களே பங்கேற்க முடியும் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 


 
 
இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணி தேர்வில் எதிர்பார்த்தது போல தோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தோனியின் தேர்வு பல விமர்சனங்களுக்கு உள்ளாகிவருகிறது.
 
இது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சமீபத்தில் பேசினார். அவர் கூறியதாவது, வரும் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முழு தகுதி உள்ளவர்களே இடம் பெற முடியும். 
 
இலங்கை அணிக்கு எதிரான தொடரின் இந்திய அணி தேர்விலிருந்து ரசிகர்களுக்கும் தேர்வுக் குழுவினருக்கும், எப்படிப்பட்ட வீரர்களை உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்ய வேண்டும் என தெரிந்திருக்கும். 
 
உலகக்கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், முழு உடற்தகுதியுடனும், திறமை உடைய வீரர்கள் மட்டுமே இந்திய அணியில் சேர்க்கப்படுவர். மற்ற விஷயங்கள் எதுவும் இனி எடுபடாது என தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments