Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனிக்குப் பின் சி எஸ் கே கேப்டன் யார்? ரெய்னாவின் சாய்ஸ் இவர்தான்!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (15:28 IST)
சி எஸ் கே அணிக்கு தோனிக்குப் பிறகு கேப்டனாக செயல்பட ஜடேஜாவை தனது சாய்ஸாக கூறியுள்ள ரெய்னா.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் தலைமையில் சி எஸ் கே அணி 4 முறை கோப்பையை வென்றுள்ளது. தற்போது 40 வயதாகும் அவர் இந்த ஆண்டு சி எஸ் கே அணியை தலைமையேற்று விளையாடுகிறார்.

இன்னும் எத்தனை ஆண்டுகள் அவர் ஐபிஎல் விளையாடுவார் என்று தெரியவில்லை. ஒருவேளை இந்த ஆண்டோடு ஓய்வை அறிவித்தாலும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவருக்குப் பிறகு சி எஸ்கே அணிக்கு கேப்டனாக செயல்பட போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி சமீபத்தில் பேசியுள்ள சுரேஷ் ரெய்னா ‘சென்னை அணியில் ராயுடு, உத்தப்பா, ஜடஜா என சீனியர் வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் அந்த தகுதி உள்ளது. ஆனால் ஜடேஜாவே அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது’ எனக் கூறியுள்ளார். ஒரு காலத்தில் தோனிக்குப் பிறகு சென்னை அணியை வழிநடத்தத் தகுதியானவர் என சுரேஷ் ரெய்னாவின் பெயரே சொல்லப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சின், கோலிக்கு இணையான மரியாதையை பும்ராவுக்குக் கொடுக்கவேண்டும் –அஸ்வின் கருத்து!

பும்ரா இல்லாவிட்டால் இரண்டாவது டெஸ்ட்டிலும் தோல்விதான்… ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

அமெரிக்காவில் சி எஸ் கே நிர்வாகிகளோடு சஞ்சு சாம்சன் சந்திப்பு… அப்ப உண்மதான் போலயே!

ஹர்திக் என்னுடையவன்… அவன் இல்லாமல் உலகக் கோப்பை இல்லை – முத்தம் குறித்த சீக்ரெட்டைப் பகிர்ந்த ரோஹித்!

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments