Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

Siva
ஞாயிறு, 18 மே 2025 (08:13 IST)
இந்தியா–பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக, ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், நேற்று முதல் மீண்டும் போட்டிகள் ஆரம்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டதால், ஐபிஎல் ரசிகர்கள் உற்சாகமாகினர்.
 
நேற்று பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூர் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில், ஏராளமான ரசிகர்கள் இந்த போட்டியை நேரில் காண குவிந்திருந்தனர். ஆனால் மழை காரணமாக போட்டி நடைபெறவில்லை. நடுவர்கள் மழை நிற்கும் என காத்திருந்து பார்த்த நிலையில், கடைசிவரை மழை நிற்கவில்லை என்பதால், இறுதியில் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
 
ஒன்பது நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியதால், ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்த நிலையில், திடீரென போட்டி ரத்து என்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தற்போதைய புள்ளி பட்டியல்படி, பெங்களூர் அணி 17 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணிக்கு நேற்று ஒரு புள்ளி கிடைத்ததால், அந்த அணி 12 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டுமே கொல்கத்தா அணிக்கு இருப்பதால், அந்த அணி முதல் நான்கு இடங்களில் இடம் பெறுவது மிக மிக கடினம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
முதல் நான்கு இடங்களில் பெங்களூர், குஜராத், பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் உள்ளன.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

இந்த சீசனோடு ஓய்வா?... தோனி எடுத்த முடிவுதான்.. வெளியான தகவல்!

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments