Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 லட்சம் பத்தாது: அதிருப்தி தெரிவித்த டிராவிட்!

Webdunia
செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (18:02 IST)
நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டவருக்கான ஐசிசி உலககோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் இந்திய அணி 4 முறை ஜூனியர் உலககோப்பையை வென்றுள்ளது. 
 
ஜூனியர் உலககோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு தலா ரூ.30 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டது. பயிற்சியாளர் டிராவிட்டுக்கு ரூ.50 லட்சமும், அவருக்கு உதவியாக இருந்தவர்களுக்கு ரூ.20 லட்சமும் அறிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில், மும்பை திரும்பிய இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது டிராவிட், இளம் வீரர்களுக்கு ரூ.30 லட்சம் போதாது, அனைவரும் ஒரே மாதிரியான பரிசு தொகையை அறிவித்து இருக்க வேண்டும் என்று அதிருப்தி தெரிவித்தார். 
 
தனக்கு உதவியாக இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர், பிசியோரெபி உடல் இயக்க நிபுனர் மற்றும் மேலும் 2 பேருக்கு ரூ.20 லட்சம் அறிவித்துவிட்டு தனக்கு மட்டும் ரூ.50 லட்சம் வழங்குவது சரியல்ல என்றும் கூறியுள்ளாராம். 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments