Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆகிறார் ராகுல் டிராவிட்!

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (08:22 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவி காலம் முடிவடைவதை அடுத்து புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலம் டி20 உலக கோப்பை தொடர் உடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் பயிற்சியாளராக பதவியேற்பார் என்றும் இதுகுறித்து ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது 
 
டிராவிட் பயிற்சியாளராக வேண்டுமென பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய்ஷா விருப்பம் தெரிவித்ததை அடுத்து தற்போது தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
வரும் நவம்பர் 17ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருப்பார் என்று கூறப்படுகிறது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருநாள் போட்டி போல் அடித்து விளையாடும் இங்கிலாந்து.. வெற்றியை நோக்கி செல்கிறதா?

டிரா செய்யும் நோக்கில் விளையாட மாட்டோம்… இங்கிலாந்து வீரர் நம்பிக்கை!

350 ரன்களுக்கு மேல் இலக்கு வைத்து இந்தியா பெற்ற வெற்றி தோல்விகள் எத்தனை?

இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனும் படைக்காத சாதனை… பல்டி நாயகன் ரிஷப் பண்ட்டின் வாழ்நாள் இன்னிங்ஸ்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இந்தியா செய்த சாதனை.. இன்றைய கடைசி நாளில் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments