Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் உறுதியானது குவாலிஃபயர் – சி எஸ் கே ரசிகர்கள் மகிழ்ச்சி !

Webdunia
வியாழன், 2 மே 2019 (10:06 IST)
சென்னை அணியின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் குவாலிபையர் போட்டி நடப்பது உறுதியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நடப்பு சாம்பியன் அணியின் சொந்த மைதானத்தில்தான் இறுதிப் போட்டிகள் நடக்கும். அதுபோல இந்த ஆண்டு சென்னையில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டி நடக்க வேண்டும். ஆனால் சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகள் அனுமதியில்லாமல் கட்டப்பட்டது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனால் 12000 இருக்கைகள் கொண்ட 3 கேலரிகளில் ரசிகர்கள் அனுமதிக்கபடுவதில்லை. அதனால் இறுதிப்போட்டிகள் அங்கு நடந்தால் பெரிய அளவில் டிக்கெட் விற்பனையில் அடிவிழும் என்பதால் போட்டியை ஹைதராபாத்துக்கு மாற்றியது ஐபிஎல் நிர்வாகம். இதனால் சென்னை ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்.

இதனையடுத்து லீக் போட்டிகளில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிய்ன் ஊர்களில் குவாலிஃபையர் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதையடுத்து சென்னை அணி நேற்றைய வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு வந்துள்ளதால் சென்னையில் போட்டிகள் நடப்பது உறுதியாகியுள்ளது. இதனால் சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments