Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை காபாற்றியது டிராவிட் சொன்ன அறிவுரை! புஜாரா நெகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (12:41 IST)
ராகுல் டிராவிட் கொடுத்த ஐடியாதான் என்னைக் காப்பாற்றியது என் புஜாரா கூறியுள்ளார்.

சென்னை அணி கடந்த சில ஆண்டுகளாக இளம் வீரர்களைக் காட்டிலும் 30 வயதைத் தாண்டிய மூத்த வீரர்களையே தங்கள் அணியில் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதனால் ரசிகர்கள் சிஎஸ்கேவை டாடீஸ் டீம் என கேலி செய்வது உண்டு. இந்நிலையில் நேற்று நடந்த ஐபிஎல் ஏலத்திலும் மொயின் அலி மற்றும் புஜாரா ஆகிய மூத்த வீரர்களையே அதிகம் ஏலத்தில் எடுத்துள்ளது. அதிலும் டெஸ்ட் போட்டிகளில் சுவர் போல நின்று ஆடும் புஜாராவை எந்த அணியும் எடுக்காத போது சென்னை அணி அடிப்படை விலையான 50 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டது இந்த ஆண்டுதான்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் டி 20 போட்டியில் ஆடுவது குறித்து பேசியுள்ள புஜாரா ‘டி 20 போட்டிகளில் அதிகமாக விளையாடினால் என்னை விட்டு டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் போய்விடும் என்று நினைத்தேன். ஆனால் ராகுல் டிராவிட் கொடுத்த அறிவுரைதான் என்னைக் காப்பாற்றியது. பல விதமான ஷாட்களை ஆடுவதால் உன்னுடைய இயல்பான திறமை போய்விடும் என நினைக்காதே’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments