Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளியா? தென்னாபிரிக்க முன்னாள் வீரர்களுக்கு புஜாரா பதில்

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2018 (06:55 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. திருமண ஓய்வுக்கு பின் விராத் கோஹ்லி மீண்டும் இந்த போட்டியில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் தனது மனைவியுடன் தென்னாபிரிக்கா சென்றுள்ளார்

இந்த நிலையில் தென்னாப்பிரிக்க மைதானங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தென்னாப்பிரிக்க ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இதற்கு பதிலளித்துள்ள இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான புஜாரா, 'தென் ஆப்பிரிக்கா ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் பந்து அதிகமாக எகிறக்கூடிய இந்த ஆடுகளம் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. இது மாதிரியான பிட்சில் எங்களால் விளையாட இயலும். சிறப்பாக விளையாடுவதில்தான் எங்களது கவனம் இருக்கும். எப்படி திட்டமிட்டபடி விளையாடுவது என்பதில் தெளிவாக இருக்கிறோம். எந்தவிதமான ஆடுகளத்தில் ஆடுவதற்கு எல்லா வகையிலும் தயாராக இருக்கிறோம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

அடுத்த கட்டுரையில்