Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்துவதா? - மோடிக்கு பிடி.உஷா கடிதம்

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2015 (13:43 IST)
பள்ளிகள் அளவிலான விளையாட்டுப் போட்டிகளை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே நடத்தும் விளையாட்டு ஆணையத்தின் முடிவிற்கு முன்னாள் ஓட்டபந்தய வீராங்கனை பி.டி.உஷா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு பி.டி.உஷா கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். இந்திய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளை இந்திய விளையாட்டு ஆணையம் நடத்தி வருகிறது.
 
இந்த ஆண்டு டிசம்பர் 4-வது வாரத்தில் புனேவிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் நாசிக்கிலும் நடைபெறவுள்ள விளையாட்டு போட்டிகளை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே நடத்த இந்திய பள்ளி விளையாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது.
 
இந்நிலையில் அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இது அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக உள்ளது. இதற்கு எத்தகைய காரணங்கள் பின்புலத்தில் இருந்தாலும், இது ஜனநாயகமற்றது ஆகும். என்னுடைய உச்சபட்ச கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது அந்தக் காலம். ஆண், பெண் சமநிலையை மேம்படுத்த உலகம் முழுக்க பாலின பாகுபாட்டிற்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில் இந்திய பள்ளி விளையாட்டு ஆணையம் தனது செயலை நியாயப்படுத்த முடியாது.
 
இது சர்வதேச ஒலிம்பிக் சாசனத்திற்கும் எதிரானது என்று தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

Show comments