Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணிக்கு முதல் வெற்றி

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (07:38 IST)
இந்த ஆண்டுக்கான புரோ கபடி தொடர் போட்டிகள் நேற்று சென்னையில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி பாட்னாவுடன் மோதியது. இந்த போட்டியை கமல்ஹாசன் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தேசிய கீதம் பாடி போட்டியை தொடாங்கி வைத்தார். தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பர தூதர் விஜய்சேதுபதி போட்டியை நேரில் கண்டு ரசிக்க வருகை தந்தார்

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே தமிழ் தலைவாஸ் அணியினர் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். முதல் 18 நிமிடங்களில் தமிழ் தலைவாஸ் அணி 16-6 என்ற புள்ளிக்கணக்கில் முன்னணியில் இருந்தது. இந்த ஆதிக்கம் கடைசி வரை இருந்ததால் தமிழ் தலைவாஸ் அணி 42-26 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னாவை வீழ்த்தியது. அதேபோல் நேற்று நடைபெற்ற புனே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா 3 புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி உபி அணியுடனும், புனே ஹரியானா அணியுடனும் மோதவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments