ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.75 லட்சம் பரிசு அறிவிப்பு!
ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.75 லட்சம் பரிசு அறிவிப்பு!
ரியோவில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் 1.89 மீ. உயரத்தை தாண்டி மாரியப்பன் வென்ற தக்கப் பதக்கமே ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் பதக்கம். இவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
தங்கம் வென்ற மாரியப்பனுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிசு அறிவித்துள்ளது. தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த மாரியப்பனுக்கு ரூ.75 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல வெண்கல பதக்கம் வென்ற பஞ்சாப் வீரர் வருண் சிங்கிற்கும் ரூ.30 லட்சம் பரிசு அறிவித்துள்ளது விளையாட்டுத்துறை அமைச்சகம்.