Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சக வீராங்கனைகளை உற்சாகப்படுத்திய சோனியா காந்தியின் பேத்தி

சக வீராங்கனைகளை உற்சாகப்படுத்திய சோனியா காந்தியின் பேத்தி
, வியாழன், 4 பிப்ரவரி 2016 (10:47 IST)
புதுச்சேரியில் நடைபெறும் அகில இந்திய சப் ஜூனியர் கூடைப்பந்து போட்டியில், சோனியாகாந்தியின் பேத்தியும், பிரியங்காவின் மகளுமான மிரயா வதேரா, சக வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி வருகிறார்.

 
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக அகில இந்திய சப்–ஜூனியர் கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் அரியானா அணி சார்பில் மிரயா வதேரா விளையாடி வருகிறார். இந்நிலையில், நேற்று அரியானா அணி தமிழக அணியுடன் மோதி தோல்வி அடைந்தது. ஆனால், விட முயற்சியுடன் இன்று மேற்கு வங்க அணியுடன்  மோதி வெற்றிபெற வேண்டும் என்று பயிற்சியாளர்கள் அனைத்து வீராங்கனைகளுக்கும் பயிற்சி வழங்கினார்கள். இதில் மிரயா வதேராவும் பங்கேற்று பயிற்சி பெற்று வருகிறார். 
 
இன்று அதிகாலை மேற்கு வங்க அணியுடன் நடந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே அரியானா அணி சிறப்பாக ஆடியது. 4 சுற்றாக நடந்த போட்டியில் 2 வது சுற்றில் மட்டும் தான் மிரயாவதேரா ஆடினார். மற்ற 3 சுற்றுகளில் அருகில் அமர்ந்து தன்னுடைய சக வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி வந்தார். அப்போது, சக வீராங்கனைகளின் பெயரை குறிப்பிட்டு சொல்லி குரல் எழுப்பினார். இதைப்பார்த்த பயிற்சியாளர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். 
 
ஆனால், மிரயா வதேரா இதுவரை விளையாடிய 2 போட்டிகளை, அவருடைய தாயார் பிரியங்கா இதுவரை போட்டியை பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil