Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமைச்சரின் மகன் போட்டியின்றி தேர்வு

Webdunia
சனி, 5 நவம்பர் 2022 (15:24 IST)
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமைச்சரின் மகன் போட்டியின்றி தேர்வு
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தமிழக அமைச்சரின் மகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழக கிரிக்கெட் சங்க தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி தேர்வு பெற்றுள்ளார். தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறவிருந்த நிலையில் அமைச்சர் பொன்முடியின் அசோக் சிகாமணி மற்றும் பிரபு ஆகிய இருவரும் போட்டியிட்டனர்
 
ஆனால் கடைசி நேரத்தில் பிரபு தனது மனுவை வாபஸ் பெற்றதை அடுத்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி  தேர்வாகியுள்ளார். மேலும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக பழனி தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா பிசிசியின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமைச்சரின் மகன் தேர்வு செய்யப்பட்டு இருப்பதை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments