Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமைச்சரின் மகன் போட்டியின்றி தேர்வு

Webdunia
சனி, 5 நவம்பர் 2022 (15:24 IST)
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமைச்சரின் மகன் போட்டியின்றி தேர்வு
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தமிழக அமைச்சரின் மகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழக கிரிக்கெட் சங்க தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி தேர்வு பெற்றுள்ளார். தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறவிருந்த நிலையில் அமைச்சர் பொன்முடியின் அசோக் சிகாமணி மற்றும் பிரபு ஆகிய இருவரும் போட்டியிட்டனர்
 
ஆனால் கடைசி நேரத்தில் பிரபு தனது மனுவை வாபஸ் பெற்றதை அடுத்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி  தேர்வாகியுள்ளார். மேலும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக பழனி தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா பிசிசியின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமைச்சரின் மகன் தேர்வு செய்யப்பட்டு இருப்பதை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments