Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரேசில் கால்பந்து வீரர்களுடன் சென்ற விமானம் விபத்து

பிரேசில் கால்பந்து வீரர்களுடன் சென்ற விமானம் விபத்து
, செவ்வாய், 29 நவம்பர் 2016 (11:43 IST)
பிரேசில் கால்பந்து வீரர்களுடன் 72 பேர் பயணம் செய்த சார்டர் விமானம் பொலிவியாவில் இருந்து மேடெல்ளின் சர்வதேச விமான நிலைத்திற்கு செல்லும் வழியில் விபத்துக்குள்ளானது.


 
 
பொலிவியாவில் இருந்து மெடெல்ளின் சர்வதேட விமான நிலையத்தை நோக்கி சார்டர் விமானம் சென்றது. இந்த விமானத்தில் பிரேசில் நாட்டு சபெகோஎன்சே க்ளப் கால்பந்து வீரர்கள் உட்பட 72 பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.
 
இந்நிலையில் சற்றும் எதிர்பாராத வலையில் விமானம் விபத்துக்குளாகி நொறுங்கி விழுந்தது. விபத்துக்கான காரணம் எரிபொருள் பற்றாக்குறை என கூறப்படுகிறது.
 
நாளை (புதன்கிழமை) மேடெல்ளின் நடைபெற உள்ள கோபா சுட்அமெரிக்கான இறுதி சுற்றில் அக்லெடிகோ தேசியோனல் அணியை எதிர்த்து போட்டியிடுவற்காக பிரேசில் கால்பந்து வீரர்கள் சென்றுள்ளனர். 
 
பயணிகள் யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போராடும் இங்கிலாந்து, வெற்றியை நோக்கி இந்தியா: அஸ்வின், ஜடேஜா அசத்தல்!