Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் செய்ய முடிவு

Webdunia
ஞாயிறு, 23 செப்டம்பர் 2018 (16:33 IST)
ஆசிய கோப்பை போட்டியில் இன்றை இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 2018 தொடர் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. 
 
கடந்த  19ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியில், 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்தியா - பாகிஸ்தான் அணி மீண்டும் மோத இருக்கிறது. 
 
சற்று முன்னர் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்திய பவுலிங் வீரர்கள் ஃபுல் பார்மில் உள்ளனர்.
கடைசி ஆட்டத்தைப்போல பாகிஸ்தான் வீரர்களை தோற்கடிப்போம் என ரோகித் ஷர்மா ஏற்பனவே கூறியிருந்தார்.
 
ஆனால் போன ஆட்டத்தில் தோற்றதற்கு இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் முனைப்புடன் களமிறங்க இருக்கிறது. இந்த போட்டியில் யார் வெல்லப் போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments