Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரன் எடுக்க ஒரே திசையில் ஓடிய பாகிஸ்தான் வீரர்கள்: U19 போட்டியில் காமெடி

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (22:17 IST)
ரன் எடுக்க ஒரே திசையில் ஓடிய பாகிஸ்தான் வீரர்கள்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியின் இரண்டு வீரர்கள் ஒரே திசையில் ரன் எடுக்க ஓடிய காமெடி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 
 
பாகிஸ்தான் அணி 31வது ஓவரை எதிர்கொண்டபோது அக்ரம் என்ற பேட்ஸ்மேன் பந்தை அடித்துவிட்டு ரன் எடுக்க ஓட முயன்றார். ஆனால் எதிரில் நின்ற ரன்னரால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இருவரும் ஒரு கட்டத்தில் ஒரே திசையில் ஓடினார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் இந்திய வீரர்கள் ரன் அவுட் செய்து ஒரு பேட்ஸ்மேனை வெளியேற்றினார்கள். இதனால் நல்ல பேட்ஸ்மேனான நசீர் 9 ரன்களில் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது
 
இதுகுறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதே போன்று பல முறை பாகிஸ்தான் சீனியர் வீரர்கள் ரன் அவுட் ஆகி இருப்பது தெரிந்ததே. சீனியர்கள் போலவே ஜூனியர் வீரர்களும் ரன் அவுட் ஆகி வருவதாக கமெண்ட் பதிவாகி வருகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பைத் தொடர்… இந்திய அணியின் ஜெர்ஸியில் ஸ்பான்ஸர் இடம் காலி!

415 ரன்கள் இலக்கு கொடுத்த இங்கிலாந்து.. வெறும் 72 ரன்களில் ஆல்-அவுட் ஆன தெ.ஆப்பிரிக்கா..!

பயிற்சியாளர்களிடம் இருந்து அறிவுரைப் பெறாத ஒரே கேப்டன் தோனிதான்… ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

கிரிக்கெட் போட்டி நடந்தபோது மைதானத்தில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி, பலர் படுகாயம்

ஆஸ்திரேலியா A அணிக்கெதிரான இரண்டு நாள் போட்டி… கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments