Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டி: பாகிஸ்தான் கொடுத்த இமாலய இலக்கு!

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (15:15 IST)
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது
 
அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியின் அகமது மற்றும் சதாப் கான் இருவரும் அரைசதம் அடித்தனர். குறிப்பாக சதாப் கான் அபாரமாக விளையாடி 22 பந்துகளில் அரைசதமடித்தார். இருப்பினும் கடைசி நேரத்தில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் 186 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் தென்ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வென்றாலும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது சந்தேகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா இன்றைய போட்டியில் வென்றால் இந்திய அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

டி20 போட்டியில் 19 சிக்ஸர்கள்.. கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீரர்..!

இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் தொடக்க ஜோடி இதுதான்… வெளியான தகவல்!

மூன்றாவது நாளே முடிந்துவிடுமா டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி? சரியும் விக்கெட்டுக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments